இடுகைகள்

கர்மாவின் கணக்கு மிக துல்லியமாக நிறைவேறியது

படம்
இது ஒரு லாரி டிரைவர் பத்தின கதை  விதியின் சக்கரம் சுழலும் சத்தம் அந்த லாரி இன்ஜின் சத்தத்தை விட பயங்கரமானது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்திருக்கவில்லை. இது வெறும் காமத்தின் கதை கிடையாது. நம்பிக்கை துரோகத்தின் நிழலில் வளர்ந்து அதன் இறுதியில் கர்மாவின் கைகளில் சிக்கி சீரழிந்த ஒரு குடும்பத்தின் கண்ணீரும் ரத்தமும் கலந்த பெரும் காவியம்.  எளிய மனிதனின் ஏழை உலகம்  முத்து ஒரு பாவமும் அறியாத ஒரு நல்ல மனிதன் நேஷனல் ஹைவே என்று சொல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இரவும் பகலும் ஓடும் கே கே ஆர் ட்ரான்ஸ்போர்ட் லாரியின் கிளீனர். லாரியின் சக்கரங்கள் எப்படி தேய்கின்றது அவனுடைய வாழ்நாளும் அப்படித்தான் தேய்ந்து கொண்டிருந்தது. அவனுக்கு எந்த ஒரு பெரிய ஆசைகளும் கிடையாது. சொந்தமாக ஒரு டீக்கடை வைக்க வேண்டும். இரண்டு குழந்தைகளையும் நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவுதான் அவனுடைய லட்சியமாகவே இருந்தது. அவனுடைய உலகம் அவனது மனைவி ரேகா மற்றும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இந்த மூன்று பேரைச் சுற்றியே சொல்கின்றது. முத்து மாதிரி ஒரு தங்கமான மனுஷனை இந்த உலகத்தில் பார்க்...

ஒரு நிமிடக் கோபத்தின் விலை... ஆயுள் முழுக்க அழும் ஒரு குடும்பத்தின் கதை!

படம்
முருகன் வாழ்க்கையில பெரிய கனவுகள் எதுவுமே இல்லாத ஒரு சாதாரண மனுஷன். காலையில வேலைக்குப் போயிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்து, மனைவி லட்சுமி செஞ்சு தர்ற சூடான சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு, குழந்தைகளோட சிரிச்சுப் பேசிட்டு இருக்குறதுதான் அவனுக்கு சொர்க்கம். அவனோட மகன் கார்த்திக் எப்போ பாத்தாலும், “அப்பா, நான் பெரிய போலீஸ் ஆவேன்”னு சொல்லுவான். சின்னப் பொண்ணு மீனா, “நான் டாக்டர் ஆகணும்”னு புத்தகத்தைக் கட்டிக்கிட்டே தூங்குவாள். அந்தச் சின்ன வீட்டுல பெரிய வசதி இல்லாட்டியும் நிம்மதி இருந்துச்சு. ​ஆனா, அந்த நிம்மதியைக் கெடுத்தது அவனோட எதிரி இல்ல; “நண்பன்” என்ற பேர்ல கூடவே இருந்த சேகர். ​சேகர், பள்ளி நாட்கள்ல இருந்தே முருகனோட நண்பன். ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவாங்க, சைக்கிள்ல சுத்துவாங்க. பள்ளி முடிஞ்சதும் ஆற்றங்கரையில உட்கார்ந்து அவங்க கனவுகளைப் பத்திப் பேசுவாங்க. ஆனா, வயசாக ஆக சேகர் மாற ஆரம்பிச்சான். அவனுக்கு எப்பவும் சண்டைதான் பிடிக்கும். யாராவது எதிர்த்துப் பேசினா உடனே கோபம் வந்துடும். “நம்ம பேரைக் கேட்டாலே ஊரே பயப்படணும்”ங்குறதுதான் அவனோட வாழ்க்கைக் கொள்கையா இருந்துச...

Tvk விஜய் ஆட்சியின் கீழ் அமைந்துள்ள 35 அமைச்சர்கள் பட்டியல்

படம்
 தமிழக அரசியலில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 35 அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. யாரெல்லாம் எந்தெந்த துறையை வகிக்கிறார்கள் என்பது இங்கு காணலாம் 1 சி. ஜோசப் விஜய்  (முதலமைச்சர்) பெரம்பூர் /  திருச்சி கிழக்கு பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, உளவுத்துறை மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் 2 என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தியாகராய நகர் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சிறுபாசனம் 3 என். மேரி வில்சன் ஆர்.கே. நகர் நிதித்துறை, திட்டமிடல் மற்றும் கூட்டுறவு 4 கே.ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை 5 ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு 6 டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் திருச்செங்கோடு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை 7 பி. வெங்கடரமணன் மயிலாப்பூர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, பொது விநியோகத் திட்டம் (PDS) 8 சி.டி.ஆர். நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் மின்சாரம், சட்டத்துறை, சிறைச்சாலைகள் 9 ராஜ்மோகன் ஆறுமுகம் எழும்பூர் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, ச...

கரும்புத் தோட்டத்தின் அழகிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்

படம்
 அந்த கிராமத்துக்கு வெளியே போகும் மண் சாலை முழுக்க மாலை சூரியன் சிவப்பாக படர்ந்திருந்தது. அந்த சாலையின் இருபுறமும் முடிவே தெரியாத அளவுக்கு கரும்புத் தோட்டங்கள். காற்று அடிக்கும் ஒவ்வொரு நேரமும் கரும்புகள் அசைந்து “சஷ்ஷ்… சஷ்ஷ்…” என்று ஒரு விசித்திரமான இசை எழுப்பும். அந்த சத்தத்தைக் கேட்டாலே அருணின் மனசு அமைதியாகி விடும். அருண் நகரத்தில் வேலை பார்த்தவன். கணினி முன்னாடி தினமும் பத்து மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்து பார்த்து வாழ்க்கையே ஒரு மெஷின் மாதிரி ஆகி விட்டது. சம்பளம் இருந்தது. பெரிய அலுவலகம் இருந்தது. ஏசி இருந்தது. ஆனால் மனசுக்கு அமைதி இல்லை. இரவு தூக்கம் கூட சரியாக வராது. சின்ன விஷயத்திற்கே கோபம் வரும். முகத்தில் சிரிப்பு குறைந்து போனது. ஒரு நாள் அவன் திடீரென்று முடிவு செய்தான். “இப்படி வாழ்ந்தா நானே என்னை மறந்து போயிடுவேன்…” அதற்குப் பிறகு இரண்டு வார விடுமுறை எடுத்துக்கொண்டு தன் சொந்த கிராமத்துக்கு வந்தான். அவன் கிராமம் மதுரை மாவட்டத்துக்கு அருகே இருந்த ஒரு அழகான ஊர். ஊருக்குள் நுழையும் நேரமே மண்ணின் வாசனை அவன் மூச்சில் கலந்தது. சாலையோரத்தில் மாடு மேய்க்கும் பசங்க, டீக்கட...

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்புகள்

படம்
 இந்தியாவில் தற்போது 28 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான மொழி, கலாசாரம், உணவு, இயற்கை வளம், தொழில் மற்றும் வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு: கோவில்களின் மாநிலம், பாரம்பரிய தமிழ் கலாசாரம், பாரதநாட்டியம், ஜல்லிக்கட்டு, ஐடி துறை வளர்ச்சி, மரினா கடற்கரை. கேரளா சிறப்பு: “God’s Own Country”, பின்நீர் கால்வாய்கள், ஆயுர்வேதம், அதிக கல்வியறிவு, தேயிலை மற்றும் மசாலா உற்பத்தி. கர்நாடகா சிறப்பு: இந்தியாவின் Silicon Valley எனப்படும் பெங்களூரு, மைசூர் அரண்மனை, காபி உற்பத்தி. ஆந்திரப் பிரதேசம் சிறப்பு: திருப்பதி கோவில், காரமான உணவுகள், விவசாய வளம். தெலுங்கானா சிறப்பு: ஹைதராபாத் பிரியாணி, ஐடி நிறுவனங்கள், சார்மினார். மகாராஷ்டிரா சிறப்பு: மும்பை நகரம், பாலிவுட், இந்தியாவின் பொருளாதார மையம். குஜராத் சிறப்பு: மகாத்மா காந்தி பிறந்த மாநிலம், வணிக வளர்ச்சி, கீர் சிங்கங்கள். ராஜஸ்தான் சிறப்பு: பாலைவனம், அரண்மனைகள், ஒட்டக கலாசாரம். பஞ்சாப் சிறப்பு: இந்தியாவின் தானிய களஞ்சியம், பங்க்ரா நடனம், தங்கக் கோவில். ஹரியானா சிறப்பு: விளையாட்டு வீரர்கள் அதிகம் உருவாகும் மாநிலம், விவச...

Dream 11 அப்ளிகேஷனில் தங்கள் பணத்தை இழந்து வாடும் இலைங்சர்கள்

படம்
 இப்போ இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் அதிகமான இளைஞர்களை கவர்ந்து இழுத்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று தான் fantasy gaming. அதுல முக்கியமா பேசப்படுறது ட்ரீம் லெவல் மாதிரி கிரிக்கெட் டீம் 11 பேர் செலக்ட் பண்ணுற கேம்கள். ஆரம்பத்துல இது ஒரு சின்ன பொழுதுபோக்கு மாதிரி இருந்துச்சு. “கிரிக்கெட் தெரியுமா? அப்போ உங்க knowledge use பண்ணி காசு பணம் ஜெயிக்கலாம்”ன்னு சொல்லி பல பேரை உள்ளே இழுத்தாங்க. ஆனா இப்போ நிலைமை என்னன்னா, மக்கள் கிரிக்கெட்டைப் பார்க்குறத விட இந்த fantasy app-ல டீம் போடுறதுக்காகவே match பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சாதாரண கூலி தொழிலாளி முதல் கல்லூரி மாணவன் வரை, எல்லாருமே “இந்த தடவை நிச்சயம் ஜெயிப்பேன்”ன்னு நம்பி பணத்தை போட்டுட்டு இருக்காங்க. ஆனா மேட்ச் நடந்து கொண்டு இருக்கும்போது பத்து லட்சத்து 50 ஆயிரம் இருவது லட்சத்து 30 ஆயிரம் என்ற இடத்துல தான் இருப்பாங்க.ஆனால் உண்மையிலேயே யார் ஜெயிக்கிறாங்க? தினமும் லட்சக்கணக்கில் மக்கள் டீம் போடுறாங்க. ஆனா top rank எடுப்பவர்கள் ஒரே மாதிரி சில accounts வச்சுக்கிட்டு யார் 11 பேர் நல்லா விளையாடுறாங்கன்னு பார்த்து அவங்கள செலக்ட் பண்ண...

Auto pay வழியாக தங்கள் பணத்தை இழக்கும் பாமர மக்கள்

படம்
 இப்போது கிராமத்திலிருந்து நகரம் வரை, கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் உலகமே கைக்குள் வந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த ஸ்மார்ட்போன் வழியாக பல குடும்பங்களின் சேமிப்பு பணம் அமைதியாக கசிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக “Auto Pay” என்ற வசதி காரணமாக, பல சாதாரண மக்கள் தங்களுக்கே தெரியாமல் பணத்தை இழந்து வருகிறார்கள். இதை பலர் சுலபம், வசதி, டென்ஷன் இல்லாத கட்டணம் என்று நினைத்து பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒரு தவறான கிளிக், ஒரு கவனக்குறைவு, ஒரு புரியாத ஆங்கில வார்த்தை இதுவே பல ஆயிரம் ரூபாய்களை காலி செய்து விடுகிறது. ஒரு காலத்தில் மாதம் மாதம் EB bill கட்ட வேண்டும் என்றால் வரிசையில் போஸ்ட் ஆபீஸில் மற்றும் eb ஆபீஸில் நின்றார்கள். DTH recharge செய்ய கடைக்கு போனார்கள். இப்போது எல்லாம் மொபைலில் ஒரு நொடியில் இந்த வேலையை செய்ய முடிகிறது. இந்த வசதியோடு சேர்ந்து வந்ததே Auto Pay. “ஒரு முறை அனுமதி கொடுங்கள், பிறகு மாதம் மாதம் தானாக பணம் பிடித்துக் கொள்கிறோம்” என்பதே அதன் அடிப்படை. ஆரம்பத்தில் இதை மக்கள் நம்பினார்கள். “சரி, மாதம் Netflix, Amazon, EMI, insurance, SIP, loan inte...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது