தெரு நாய்கள் மக்களுக்கு ஒரு வர பிரசாதம்
என்னடா இவன் நாய் போயி மக்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறானே அப்படித்தானே நினைக்கிறீங்க? ஆமா தாங்க இந்த உலகத்தில் முதல் நண்பன் யார்? என்று கேட்டால் அது நாய்கள் தான். ஆதி காலத்தில் இருந்து இன்று வரை மனிதனுக்கு ஒரு உற்ற நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயல்படக்கூடியது இந்த நாய்கள் இனம். மனிதன் ஆதிகாலம் தொட்டு அன்றிலிருந்து இன்று வரை அவனுக்கு உறுதுணையாக செயல்பட்டு கொண்டிருப்பது இந்த நாய்கள் தான். இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய அருட்பெரும் கொடை தான் இந்த நாய்கள். காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு அவனுடைய பாதுகாப்பிற்காகவே அவனுடன் அழைத்துச் சென்று அந்த நாயை பழக்கினான். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் நாயை பழக்கவில்லை நம்மை தான் நாய்கள் பழகிக் கொள்கின்றன. நாய்களின் மூலையில் மனிதர்களுக்கு நீ உறுதுணையாக பாதுகாப்பாக எப்போதும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து தான் அந்த நாயை உருவாக்கி இருக்கின்றார். அப்படிப்பட்ட அந்த நாயை பற்றி சொல்ல வேண்டுமேயானால் நாய்கள் எந்த விளக்குகளுக்கும் எந்த உயிரினங்களுக்கும் பயப்படாத ஒன்று. தன் எஜமானருக்கு ஒரு பிரச்சனை வந்து வட்டால் களத்தில் இறங்கி...